• July 31, 2025
  • NewsEditor
  • 0

திருவாரூர் மாவட்ட திமுக-வில் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, 18 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் இரண்டு முறை வென்றபோதும் தொகுதியில் அவருக்கான ஆக்டிங் எம்எல்ஏ-வாக இருந்த கலைவாணன், இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், இதே மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜாவும் அதற்கான போட்டியில் இருந்ததால் இருவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்காமல் சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டது தலைமை.

இத​னால், திரு​வாரூர் மாவட்​டத்​தில் கலை​வாணனும் ராஜா​வும் ஆளுக்​கொரு பக்​கம் பலம் திரட்​டி​னார்​கள். மன்​னார்​குடி​யில் தொடர்ச்​சி​யாக மூன்​றாவது முறை​யாக வென்​றிருக்​கும் டி.ஆர்​.பி.​ராஜா, தனது தொகு​திக்​குள் பூண்டி கலை​வாணன் அரசி​யல் நடவடிக்​கை​களில் ஈடு​படக்​கூ​டாது என்​ப​தில் தீர்​மான​மாக இருந்​தார். இதனால், சம்​பிர​தாய​மான கட்சி நிகழ்ச்​சிகளைத் தவிர வேறு எதற்​காக​வும் பூண்டி கலை​வாணன் மன்​னார்​குடி பக்​கம் தலை​காட்​டு​வ​தில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *