
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களைத் தொடர்ந்து, அரசின் சேவைகளை பொதுமக்கள் வசிப்பிடத்திலேயே சென்று வழங்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கடந்த ஜூலை 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.