
சென்னை: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், திருவேற்காடு நகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவேற்காடு கோலடி கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் எம்.காமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.