
சென்னை: திருநெல்வேலியில் ஐடி ஊழியர் சாதிய படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர்கவின் சாதிய படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த கொடூர சாதிய கொலைக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களை காவல் துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்.