
சிவகங்கை: அஜித்குமார் மரணத்துக்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அஜித்குமாரின் கொலை வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி நீர்த்து போகவைக்க முயற்சி நடந்தது. நாங்கள் போராட்டம் நடத்தியதால்தான் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்துக்கு நேரில் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அஜித்குமாரின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.