
ராமேசுவரம்: ராமேசுவரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கு ரூ.118 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
ராமேசுவரத்தில் தமிழ்நாடு கடல்சார் வாரியம் மூலம் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துறைமுக அலுவலக கட்டிடத்தை பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். தொடர்ந்து ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் ஓலைகுடா சாலையில் தமிழ்நாடு கடல் சார் வாரியம் மூலம் படகு இல்லம், அப்துல்கலாம் நினைவிடத்திலிருந்து ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடற்கரை வரை புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.