
புதுடெல்லி: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இறந்த ஒருவரின் மகளான அசாவரி ஜக்தலே, மகாராஷ்டிராவின் புனேயிலிருந்து தனது நன்றியை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “இந்திய ராணுவத்துக்கும் மத்திய அரசுக்கும் நன்றி கூறுகிறேன். இன்று அந்த 26 பேருக்கும் அமைதி கிடைக்கும். இன்று நாமும் நிம்மதியாக தூங்க முடியும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது எனவும் நாட்டில் அமைதி நிலவும் என்றும் நாங்கள் நம்புகிறோம். பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க மகாதேவ் போன்ற என்கவுன்ட்டர்களை அரசு தொடர வேண்டும்” என்றார்.