
அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இறுதிகட்டப் பணிகள் இருந்ததால் விஜய் தேவரகொண்டா மட்டுமே கலந்து கொண்டார். இதில் விஜய் தேவரகொண்டா பேசும் போது, “என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31-ஆம் தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்.