• July 30, 2025
  • NewsEditor
  • 0

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசில்டாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இதுதொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியிருக்கிறார் ஜாய்.

கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராக உயர்ந்திருப்பவர். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. இவர்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா என்பது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது ரங்கராஜ்- ஜாய் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துகொண்ட ஆடை வடிவமைப்பாளர் ஜாய், தனது சமூகவலைதள பக்கத்தில் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த ஆண்டு குழந்தை வரப்போவதாகவும் ‘Baby loading 2025 We are pregnant 6th month of pregnancy’ எனக் கூறியிருந்தார்.

‘கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றாக வாழத் தொடங்கிவிட்டோம்’ – ஜாய்

இந்நிலையில் தற்போது தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஜாய் கிறிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒன்றைத் தெளிபடுத்த விரும்புகிறேன். சில வாழ்க்கைப் பயணத்தை அமைதியாகத் தொடங்க வேண்டியிருக்கிறது. கண்ணியத்துடனும், மிகுந்த அன்புடனும் நானும், ரங்கராஜ் அவர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே கணவன் – மனைவியாக எங்கள் வாழ்க்கையைத் தொடங்கிவிட்டோம்.

எங்கள் அன்பின் அடையாளமாக இந்த ஆண்டு எங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது.” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *