
சென்னை: “ஜெயலலிதா இருக்கும் வரை ஒன்றிய அரசின் ‘உதய் மின் திட்டத்தில்’ அவர் கையெழுத்து போடவில்லை. அவர் மறைந்த பிறகு ஒடோடிப்போய் கையெழுத்து போட்டு தமிழ்நாட்டை வஞ்சித்தது சந்துகளில் இருந்து குரல் கொடுக்கும் பழனிசாமிதான் என்பது ஊருக்கே தெரிந்தபோதும் இன்று அவரே மின்கட்டணம் உயர்ந்துவிட்டது என நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார்” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சில நாட்களுக்கு முன்பு “முதல்வர் பூரண நலம் பெற வேண்டும்” என ‘சுந்தரா டிராவல்ஸ்’ யாத்திரையில் சொன்ன அதே எதிர்க்கட்சி தலைவரின் நாக்குதான் இப்போது ‘ஆஸ்பத்திரியில் டேபிள் மீட்டிங்’ என நர்த்தனம் ஆடுகிறது. அது சரி பொதுவாக எல்லோரும் டேபிள் முன்பு அமர்ந்துதான் மீட்டிங் போடுவார்கள் என்பது தெரியாமல்தானே பழனிசாமி பாவம் டேபிளுக்கு அடியில் மீட்டிங் போட்டார் !