
சென்னை: சென்னையில் ரூ.2.38 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பாரா விளையாட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக நாட்டிலேயே முதல்முறையாக, தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், திருநெல்வேலி, சேலம் என 6 மாவட்டங்களில் ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் சென்னையைத் தவிர, 5 மாவட்டங்களில் தலா ரூ.1 கோடியில் பாரா விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாவட்டத்தில் கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் ரூ.2.38 கோடியில் பாரா விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.