• July 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் ரூ.2.38 கோடி​யில் அமைக்​கப்​பட்டு வரும் பாரா விளை​யாட்டு மைதானத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். பாரா விளை​யாட்​டு​களை ஊக்​குவிக்​கும் வித​மாக நாட்​டிலேயே முதல்​முறையாக, தமிழகத்​தில் சென்னை, திருச்​சி, மதுரை, கடலூர், திருநெல்​வேலி, சேலம் என 6 மாவட்​டங்​களில் ரூ.7.38 கோடி மதிப்​பீட்டில் பாரா விளை​யாட்டு மைதானங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இதில் சென்​னையைத் தவிர, 5 மாவட்​டங்​களில் தலா ரூ.1 கோடி​யில் பாரா விளை​யாட்டு மைதானங்​கள் உரு​வாக்​கப்​பட்டு வருகின்றன. சென்னை மாவட்​டத்​தில் கீழ்ப்​பாக்​கம், நேரு பூங்கா விளை​யாட்டு வளாகத்​தில் ரூ.2.38 கோடி​யில் பாரா விளை​யாட்டு மைதானம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *