
சென்னை: நெல்லை ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்டதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம். சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரையும் இணைத்துள்ளார்.