• July 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சமூக நீதிக்​கான அரசி​யலை​யும், போராட்​டத்​தை​யும் நாம் மீண்​டும் மீண்​டும் சொல்​லிக்​கொண்டே இருக்க வேண்​டும் என்று மருத்​துவ மாணவர் சேர்க்​கை​யில் ஓபிசி பிரி​வினருக்கு 27 சதவீதம் இடஒதுக்​கீடு பெற்​றதை சுட்​டிக்​காட்டி முதல்​வர் மு.க.ஸ்டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். அகில இந்​திய மருத்​துவ மாணவர் சேர்க்​கை​யில் ஓபிசி பிரி​வினருக்கு 27 சதவீதம் இடஒதுக்​கீடு தொடர்​பாக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி சாதக​மான தீர்ப்பு வெளிவந்​தது.

இந்த வெற்​றியைக் குறிப்​பிட்​டு, மாநிலங்​களவை திமுக எம்​.பி.​யும், மூத்த வழக்​கறிஞரு​மான பி.​வில்​சன் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது:சமூகநீதி வரலாற்​றின் சாதனை மைல் கல். 2021 ஜூலை 29 அன்​று, அகில இந்​திய மருத்​துவ மாணவர் சேர்க்​கை​யில் ஓபிசி 27 சதவீதம் இடஒதுக்​கீடு வென்று காட்​டிய சமூகநீதி நன்​னாள். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காட்​டிய வழி​யில், ஓபிசி மாணவர் நலனில் கொண்ட உறு​தி​யில் சட்​டப் போராட்​டத்​தில் வென்று காட்​டினோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *