• July 30, 2025
  • NewsEditor
  • 0

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணை நிரம்​பி​யுள்ள நிலை​யில், காவிரியில் விநாடிக்கு 1.10 லட்​சம் கனஅடி உபரிநீர் தொடர்ந்து திறக்​கப்பட்டுவருகிறது.

கர்​நாடக​ாவில் பெய்து வரும் மழை​யால் அங்​குள்ள கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பின. இதனால் காவிரி​யில் உபரிநீர் திறக்​கப்​பட்​டு, மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 4 முறை நிரம்​பியது. தற்​போது அணைக்கு வரும் நீர் முழு​வதும் காவிரி​யில் வெளி​யேற்​றப்​படு​கிறது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் காலை 1 லட்​சத்து 500 கனஅடி​யாக​வும், இரவு 1,10,500 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்​து, நேற்று காலை​யும் அதே அளவு நீடித்​தது. அணையி​லிருந்து விநாடிக்கு 1.10 லட்​சம் கனஅடி தண்​ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யம் வழி​யாக விநாடிக்கு 18,000 கனஅடி​யும், 16 கண் மதகு​கள் வழி​யாக 92,000 கனஅடி​யும் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *