• July 30, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தி​யா​வின் பாது​காப்பு அமைப்பை மேலும் பலப்​படுத்​தும் வகை​யில், பிரளய் ஏவு​கணை சோதனை வெற்​றிகர​மாக பரிசோ​திக்​கப்​பட்​டுள்​ளது. பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ), ஒடிசா கடற்​கரை​யில் உள்ள டாக்​டர் ஏபிஜே அப்​துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்​ட​தாக மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து பாது​காப்பு அமைச்​சகத்​தின் அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: பிரளய் ஏவு​கணை​யின் இரண்டு தொடர்ச்சியான சோதனை​கள் அப்​துல் கலாம் தீவில் ஜூலை 28 மற்​றும் 29 தேதி​களில் வெற்​றிகர​மாக நடத்தி முடிக்​கப்​பட்​டுள்​ளன. ஏவு​கணை அமைப்​பின் அதி​கபட்ச மற்​றும் குறைந்​த​பட்ச தாக்​கும் திறனை மதிப்​பிடு​வதன் ஒரு பகு​தி​யாக இந்த சோதனை​கள் நடத்​தப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *