
மதுரை: சுதந்திரமாகச் செயல்பட்டுவரும் நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் துடிப்பது கண்டிக்கத்தக்கது என்று எழுத்தாளர் சோ.தர்மன் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பரிந்துரை செய்துள்ளது.