
சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாழ்நாள் முழுவதும் இந்த விசாரணை முடிவுக்கு வராது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலைக்கு பணம் பெற்ற விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.