
சென்னை: கிராம ஊராட்சிகளில் சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: இது உழைக்கும் வர்க்கத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. விலைவாசி உயர்வு, மின்கட்டணம், குடிநீர் கட்டணம், பால்விலை உயர்வு என தள்ளாடும் சிற்றுண்டிக் கடைகளை மொத்தமாக இழுத்து மூட முடிவு செய்து விட்டதா திமுக அரசு.