• July 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னையி​லிருந்து துர்​காபூர் புறப்பட இருந்த விமானத்​தின் அவசர கால கதவைத் திறக்க முயற்சி நடந்​த​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. சென்​னையி​லிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்​காப்​பூர் செல்​லும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் புறப்​படத் தயா​ரானது. விமானத்​தில் 158 பயணி​கள், 6 விமான ஊழியர்​கள் இருந்​தனர்.

விமானத்​தின் கதவு​கள் மூடப்​பட்​டு, விமானம் ஓடு​பாதை​யில் ஓட இருந்​த​போது, விமானத்​தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்​சரிக்கை மணி, விமான கேப்​டன் கேபினில் ஒலித்​தது. இதையடுத்து விமான பணிப்​பெண்​கள் விரைந்து சென்று அவசர கால கதவைத் திறக்க முயன்​றது யார் என்​பதை பார்த்​தனர். அப்​போது அவசர கால கதவு அருகே‌ உள்ள இருக்கையில் அமர்ந்​திருந்த தெலங்​கானா மாநிலம் ஐதரா​பாத்தை சேர்ந்த சர்க்​கார் (27) என்ற பயணி​தான் கதவைத் திறக்க முயன்றார் என்​பது தெரிய​வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *