• July 29, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: நீதித்துறை செயல்பாடுகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிடுவது சரியல்ல என வாஞ்சிநாதன் வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு: எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) சாதி பாகுபாகுடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட நாளில் 26.07.2025 அன்று ஒரு மண்டபக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான டி.ஹரிபரந்தாமன், கூட்டத்தினர் மற்றும் ஊடகங்களுக்கு உரையாற்றினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *