
மதுரை: மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம், தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு கடந்த காலத்தில் வெறும் ரூ.1-க்கு வாடகை விடப்பட்டுள்ளது” என்று மாநகராட்சி துணை மேயரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகராஜன் ‘பகீர்’ குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அவர் கூறியது: “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல் சிலவற்றை மட்டும் கூறுகிறேன். குளிரூட்டப்பட்ட திருமண மஹால் ‘ஏ’ கிரேடில் வரிவசூல் செய்யப்பட வேண்டும். ஆனால், ‘சி’ பிரிவில் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. பிபி.சாவடியில் உள்ள ஒரு பிரபலமான மஹாலுக்கு வரி வசூலில் 2,000 சதுர அடி உள்ளது. ஆனால், 15,000 ஆயிரம் வரை இருக்கும். இதேபோல் மதுரை முழுவதும் உள்ள திருமண மஹால்களை சரியாக அளந்து வரி விதிப்பு செய்தால் மாநகராட்சி வருவாய் பல கோடி ரூபாய் இழப்பு சரி செய்யப்படும்.