
திருநெல்வேலியில் உள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை, இதயவியல் துறையில் முக்கியமான முன்னேற்றமாக, முதல் முறையாக இண்டோ-போலிஷ் (INDO-POLISH) லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வில், போலந்து நாட்டின் லூப்பின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் டாக்டர் J. வாசின்ஸ்கி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், டாக்டர் E. அருணாசலம் இரண்டு சிக்கலான உயர் அபாய ஆஞ்சியோபிளாஸ்ட்டி (Complex High Risk Angioplasty) நோயாளிகளுக்கு லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தார்.
இந்த பயிலரங்கில், இரத்தக்குழாய்களில் உள்ள இரத்த உரைக்கட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்றுவதற்கு லேசர் கதிர்களை உமிழ்கின்ற சிறப்பு கருவி பயன்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம், ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் இலக்கு பகுதிகளுக்கு மட்டும் துல்லியமான சிகிச்சையை வழங்குகிறது. இந்தியாவில் ட்ரான்ஸ்-கதீட்டர் செயல்முறையில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் தலைமை இருதய மருத்துவர் டாக்டர் I.அருணாசலம் கூறுகையில், “எங்கள் பகுதியில் முதல் முறையாக லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இது எங்கள் நோயாளிகளுக்கு உலகத் தரமான சிகிச்சையை வழங்குவதற்கு ஒரு முக்கியமான படியாகும். லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி தொழில்நுட்பத்தின் திறனைப் பயன்படுத்தி, அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை இந்தியாவின் முன்னணி இதய சிகிச்சை நிலையமாக வளர்ந்து, அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும்.”

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஹோட்டல் ஆப்பிள் ட்ரீ-யில் நடைபெற்ற லேசர் கருத்தரங்கில் இந்தியாவின் முன்னணி இருதய நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கு, இதயவியல் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், மருத்துவ முன்னேற்றங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான தளமாக அமைந்தது.
அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, உயர்தர இதய சிகிச்சையை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது.



