• July 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: முதல்​வர் ஸ்டா​லினுக்​கு, அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தரும், மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (யுபிஎஸ்​சி) முன்​னாள் உறுப்​பினரு​மான பால​குரு​சாமி அனுப்​பி​யுள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக பல்​கலைக்​கழகங்​கள் நெருக்​கடிமிக்க சவால்​களை எதிர்​கொண்டு வரு​கின்​றன. அதற்கு விரைந்து தீர்வு காணா​விட்​டால், உயர்​கல்வி நிறு​வனங்​களின் தரம், தன்​னாட்சி அந்​தஸ்​து, உலகளா​விய போட்​டித் திறன் அனைத்​தும் பாதிக்​கப்​படும்.

தமிழக பல்​கலைக்​கழகங்​களில் தேசிய கல்விக் கொள்​கையை அமல்​படுத்​து​வ​தில் புரிதலும், சரி​யான தெளி​வும் இல்​லை. தேசிய கல்விக் கொள்​கைக்கு மாற்​றாக, அதன் இலக்​கு​களை அடை​யத்​தக்க வகையி​லான மாற்று கல்விக் கொள்​கை​யும் இது​வரை செயல்​படுத்​தப்​பட​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *