
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக பல்கலைக்கழகங்கள் நெருக்கடிமிக்க சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. அதற்கு விரைந்து தீர்வு காணாவிட்டால், உயர்கல்வி நிறுவனங்களின் தரம், தன்னாட்சி அந்தஸ்து, உலகளாவிய போட்டித் திறன் அனைத்தும் பாதிக்கப்படும்.
தமிழக பல்கலைக்கழகங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் புரிதலும், சரியான தெளிவும் இல்லை. தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, அதன் இலக்குகளை அடையத்தக்க வகையிலான மாற்று கல்விக் கொள்கையும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.