
புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய வரைபடத்துக்குள் வர வேண்டும் என நாடு விரும்புகிறது என காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் அனலை கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி, “ஆபரேஷன் சிந்தூர் பிரச்சினையாக இருந்தாலும் சரி அல்லது வேறு பிரச்சினையாக இருந்தாலும் சரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் முரண்பாடு ஏதும் இல்லை.