
பாட்னா: இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், “தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. பிரதமர் மீது எனக்கு அர்ப்பணிப்பும் அன்பும் உள்ளது என்பதை நான் பலமுறை மீண்டும் தெரிவித்துள்ளேன். பிரதமர் மோடியின் தலைமையிலேயே பிஹாரில் தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நிச்சயம் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்.