
புதுடெல்லி: ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரம் மறுத்துள்ளது. கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்திய நிலையில் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சக வட்டாரம், “நிமிஷா பிரியா வழக்கில் சில தனி நபர்கள் பகிரும் தகவல் துல்லியமானது அல்ல.” என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.