• July 29, 2025
  • NewsEditor
  • 0

சிவகாசி: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்னைக் கைது செய்து சிறையில் தனிமை அறையில் அடைத்து கொடுமைப்படுத்தினர். செத்தாலும் அதிமுகவுக்கு எதிராகச் செயல்பட மாட்டேன் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். சிவகாசியில் ஆக.7-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் பேரணி’ குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த வுடன் என்னை வேட்டையாடியது. மோசடி வழக்கில் என்னைக் கைது செய்து சிறையில் வைத்தபோது அதிமுகவுக்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்துக் கேட்டு மிரட்டினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *