
சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு மருத்துவர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, கடந்த ஜூன் 11-ம் தேதி சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து சென்னை கலைஞர் நினைவிடம் நோக்கி பாதயாத்திரையை அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவரும், அரசு மருத்துவருமான எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையில் அரசு மருத்துவர்கள் தொடங்கினர். சென்னை தேனாம்பேட்டை அருகே வந்தபோது, அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.