
புதுடெல்லி: டெல்லியில் ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க நினைத்த மூதாட்டியிடம் ரூ.77 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் வசிப்பவர் நீரு (62). தனியாக வசிக்கும் இவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக மருத்துவர்கள் பல்வேறு மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். அத்துடன் தூக்க மாத்திரையையும் அவர் பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தூக்க மாத்திரை உட்பட தனக்கு தேவையான மருந்துகளை வாங்க இணையதளத்தில் உள்ள பல மருந்து கடைகளை தேடி ஆர்டர் செய்துள்ளார். அதன் பிறகு அதை மறந்துவிட்டார்.