
சென்னை: தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மொத்தம் 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் 35 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டன. இதில் 2025-2026 ஆண்டில் மட்டும் 15 புதியக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதோடு, 253 புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.