
புதுடெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலான விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்பற்றியபோது. ஓர் அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து நீதிபதி வர்மாவின் நேர்மை குறித்து சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைத்தார். இதுதொடர்பாக விசாரிக்க தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா 3 நீதிபதிகள் கொண்ட உள் விசாரணைக் குழுவை அமைத்தார்.