
சென்னை: தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்று 25 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருது வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக அரசு என்றைக்கும் செவிலியர்களுக்கு பக்க பலமாக நிற்கும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில் 25 செவிலியர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து நூற்றாண்டு தொடக்க விழா இலச்சினை மற்றும் காலண்டர் தொகுப்பினை வெளியிட்டார்.