• July 29, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் இறகு பந்து (பாட்​மிண்​டன்) விளை​யாடிக் கொண்​டிருந்த 25 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​துள்​ளார். ஹைத​ரா​பாத்​தின் நாகோல் உள் விளை​யாட்டு அரங்​கில் ராகேஷ் (25) என்​பவர் தனது நண்​பர்​களு​டன் நேற்று காலை​யில் பாட்​மிண்​டன் விளை​யாடிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது கீழே விழுந்த இறகு பந்தை எடுத்து மீண்​டும் ஆட முயற்​சித்​த​போது, அப்​படியே கீழே சரிந்​தார். உடனே நண்​பர்​கள் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்​சைகள் செய்து அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு போய் சேர்த்​தனர். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், ராகேஷ் ஏற்​கெனவே மாரடைப்பு ஏற்​பட்டு இறந்து விட்​டதை உறு​திப்​படுத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *