• July 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பம் குறித்து கிராமப்​புற மாணவர்​களுக்கு கலந்​துரை​யாடல் மூலம் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​படும் என்று உயர்​கல்வி துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​தார். தமிழ்​நாடு மாநில உயர்​கல்வி மன்​றம் சார்​பில் ‘செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) ஏற்​படுத்​தும் தாக்​கம்’ என்ற தலைப்​பிலான கருத்​தரங்​கம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. உயர்​கல்வி துறை அமைச்​சர் கோவி.செழியன் தொடங்கி வைத்து பேசி​னார்.

உயர்​ கல்வி துறை செயலர் பொ.சங்​கர் சிறப்​புரை நிகழ்த்​தி​னார். முன்​ன​தாக, உயர்​கல்வி மன்ற துணை தலை​வர் எம்​.பி.​விஜயகுமார் வரவேற்று அறி​முக​வுரை ஆற்​றி​னார். மன்​றத்​தின் உறுப்​பினர் செயலர் டி.வேல்​முரு​கன் நன்றி கூறி​னார். விழா​வில், கல்​லூரி கல்வி ஆணை​யர் ஏ.சுந்​தர​வல்​லி, தொழில்​நுட்ப கல்வி ஆணை​யர் இன்​னசென்ட் திவ்யா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *