• July 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மத்​திய அரசு மீது பழி​போ​டா​மல் தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் திமுக செய்த சாதனை​களை பட்​டியலிட வேண்டும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார். சென்னை விமான நிலை​யத்​தில் செய்தியாளர்​களிடம் அண்​ணா​மலை கூறிய​தாவது: கங்கை கொண்ட சோழபுரம் என்ற சிறிய ஊரின் தலை​யெழுத்​தை, பிரதமரின் வருகை நிச்​சய​மாக மாற்​றும். பிரதமரின் வரு​கைக்கு பிறகு நிறைய சுற்​றுலா பயணி​கள், ஆன்​மிக​வா​தி​கள் ஏராளமானோர் வருகை தரு​வார்​கள்.

பிரதமரை சந்​திப்ப​தற்​காக ஓ.பன்​னீர்​செல்​வம் அனு​மதி கேட்​டிருந்​தாரா என்​பது எனக்கு தெரி​யாது. தமிழகத்​தில் வறட்சி தொடங்கி விட்​டது. எனவே, கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு பணியை நடத்​த வேண்​டும். விவ​சாய கடன் வழங்​கு​வதற்கு சிபில் ஸ்கோர் கேட்​ப​தில் இருந்து விவ​சா​யிகளுக்கு விலக்கு அளிப்​பது தொடர்​பாக மத்​திய அரசு பரிசீலித்து வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *