
சென்னை: ‘தமிழகம் என்றுமே ஆன்மிகம் தழைத்தோங்கும் புண்ணியபூமி என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜேந்திர சோழனின் வீர வரலாற்றின் ஆயிரமாவது வெற்றி விழாவில் பங்கேற்பதற்காகவும், தூத்துக்குடி நவீன விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி 26-ம் தேதி இரவு தமிழகம் வந்தார்.