
சென்னை: “தமிழ்நாட்டு மக்களின் உள்ளம், திமுகவை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட்டுவிட்டது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், ‘திமுக ஆட்சியில் வருமானம் அதிகம், மத்திய அரசு செய்த உதவிகளும் அதிகம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்கிற உயரிய லட்சியத்துடன், மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணத்திற்கு வானளாவிய வெற்றியைத் தந்து பெரும் ஆதரவை தொடர்ந்து வழங்கி வரும் தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்