
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை வரவுள்ள நிலையில், அதிமுகவில் பூத் கமிட்டி அமைத்ததில் ‘பொய் கணக்கு’ காட்டியுள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதையடுத்து, பூத் கமிட்டி அமைப்பதில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக ஒவ்வொரு பூத்துக்கும் 9 உறுப்பினர்களை கொண்ட கமிட்டியை அமைக்க அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார்.