• July 28, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “வர்த்தகத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைதான் இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்குக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 26 முறை கூறிவிட்டார். போர் நிறுத்தத்துக்கான காரணத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அறிய விரும்புகிறோம்.” என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அது தொடர்பாக அவைக்கு விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி சார்பில் விவாதத்தை தொடங்கிவைத்த மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், “பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் மக்கள் உதவி இருக்கிறார்கள். தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், மதத்தின் அடிப்படையில் மக்களை குறிவைக்கக்கூடாது என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *