
புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட ஏர் இந்தியாவுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி என்விஎன் சோமு நாடாளுமன்றத்தில் 3 கேள்விகளை எழுப்பி இருந்தார். 1. நாட்டில் உள்ள விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது உண்மையா? 2. உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் விமானப் பதுகாப்பு தணிக்கைகளில் உள்ள சிக்கல்களை ஆராய உயர் மட்டக் குழுவை அமைக்க அரசாங்கத்துக்கு திட்டம் உள்ளதா? 3. விமான விபத்து தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க ஏர் இந்தியாவுக்கு அரசாங்கம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதா? உள்நாட்டு மற்றம் சர்வதேச சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் விமானங்களின் பாதுகாப்பு தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பிக்க அரசாங்கம் ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டுள்ளதா? என்று கேட்டிருந்தார்.