
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த மாதம் 12-ம் தேதி அகால மரணம் அடைந்தார். அவர் லண்டனில் போலோ விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது வாயிக்குள் ஒரு தேனீ சென்றது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சஞ்சய் கபூர் நடத்தி வந்த சோனா கொம்ஸ்டார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும். இந்த சொத்துக்கு இப்போது குடும்பத்தில் போட்டி ஏற்பட்டுள்ளது. சஞ்சய் கபூருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் ஆவர். இதில் நடிகை கரிஷ்மா கபூர் உள்பட இரண்டு மனைவிகளை சஞ்சய் கபூர் விவாகரத்து செய்துவிட்டார்.
கடைசியாக திருமணம் செய்த பிரியா சச்சிதேவ்தான் சஞ்சய் கபூர் இறக்கும்போது வரை மனைவியாக இருந்தார். பிரியா சச்சிதேவிற்கும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. சஞ்சய் கபூர் இறந்தவுடன் சோனா கம்பெனியின் நிர்வாகிகள் கூடி பிரியா சச்சிதேவை கம்பெனியின் இயக்குனராக தேர்வு செய்துள்ளனர். இதற்கு சஞ்சய் கபூரின் தாயார் ராணி கபூர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதோடு தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இக்குற்றச்சாட்டை சோனா கம்பெனி நிர்வாகம் மறுத்துள்ளது. அதோடு சோனா கம்பெனியில் ராணி கபூர் பங்குதாரர் கிடையாது என்று கம்பெனி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சோனா கம்பெனியில் தனக்கு பங்கு இருப்பதாக கூறி சட்டநடவடிக்கை எடுக்கவும் ராணி கபூர் முடிவு செய்துள்ளார். சஞ்சய் கபூர் மூலம் நடிகை கரிஷ்மா கபூருக்கு 2 குழந்தைகள் இருக்கிறது.
எனவே சஞ்சய் கபூர் தனது குழந்தைகளுக்காக சஞ்சய் கபூரின் சொத்தில் பங்கு கேட்கப்போவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கரிஷ்மா கபூர் சோனா நிறுவனத்தில் தனது பிள்ளைகளுக்கு பங்கு வேண்டும் என்று கோர முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் கரிஷ்மா கபூர் தரப்பில் இது தொடர்பாக எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை. கரிஷ்மா கபூரை சஞ்சய் கபூர் விவாகரத்து செய்தபோது குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.14 கோடிக்கு பத்திரம் எடுத்து கொடுத்தார். இது தவிர கரிஷ்மா கபூருக்கு ஒரே தவணையாக ரூ.70 கோடி கொடுத்தார். இதனால் சஞ்சய் கபூரின் சொத்திற்கு உரிமை கோர கரிஷ்மா கபூருக்கு உரிமை கோர முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அதிகமான தீர்ப்புகளில் விவாகரத்தான பெண்ணின் குழந்தைகள் தங்களது தந்தையின் பூர்வீக சொத்தில் உரிமை கோர உரிமை இருக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெற்றோர்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தாலும், அவர்களது பிள்ளைகளின் சொத்து உரிமையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று கோர்ட் தீர்ப்புகள் தெரிவித்துள்ளன. அதேசமயம் ஆண்கள் விவாகரத்துக்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் முதல் மற்றும் இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் சமபங்கு இருக்கிறது.
இந்து திருமண சட்டமும் தந்தையின் சொத்திற்கு குழந்தைகள்தான் முதல் வாரிசு என்று சொல்கிறது. எனவே அனைத்து வழிகளும் கரிஷ்மா கபூருக்கு ஆதராகவே இருப்பதால் தனது குழந்தைகளுக்காக கரிஷ்மா கபூர் சஞ்சய் கபூரின் சொத்தில் பங்கு கேட்பார் என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கரிஷ்மா கபூர் மகளுக்கு இப்போது 20 வயதாகிவிட்டது. அவரது மகன் கியானுக்கு தற்போது 15 வயதுதான் ஆகிறது. சஞ்சய் கபூர் இறந்தபோது கரிஷ்மாகபூரின் இரண்டு குழந்தைகளும் தேம்பி தேம்பி அழுத வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
சஞ்சய் கபூர் இறந்த பிறகு கரிஷ்மா கபூருக்கு பிறந்த குழந்தைகளையும் தனது குழந்தைகளாக பாவிப்பேன் என்று பிரியா சச்சிதேவ் தெரிவித்து இருந்தார். எனவே பிரியா சச்சிதேவ் தானாக முன்வந்து கரிஷ்மா கபூர் குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லையெனில் கரிஷ்மா கபூர் கோர்ட் படிவேறுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றனர்.