
ஜார்ஜியாவில் இந்த மாதம் தொடக்கம் முதல் மகளிர் செஸ் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில், இந்திய வீராங்கனைகளான கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இதன் மூலம், செஸ் வரலாற்றில் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இரண்டு இந்திய வீராங்கனைகள் மோதினர்.
இதன்மூலம், மகளிர் செஸ் உலகக் கோப்பையை முதல்முறையாக இந்தியர் வெல்லும் வரலாறும் போட்டிக்கு முன்பாகவே இந்தியா வசம் வந்துவிட்டது.
ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு இறுதிப்போட்டி சுற்றுகளும் டிராவில் முடிந்ததது.
இன்று, டைபிரேக் சுற்று நடைபெற்ற நிலையில், கோனேரு ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் திவ்யா தேஷ்முக்.
மறுபக்கம், உலக ரேபிட் சாம்பியன் வென்ற கோனேரு ஹம்பிக்கு இதில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
19-year-old Divya Deshmukh is in tears after winning the 2025 FIDE Women's World Cup! pic.twitter.com/DuFYH0bqT5
— chess24 (@chess24com) July 28, 2025
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது திவ்யா தேஷ்முக், 2021-ல் இந்தியாவின் 21-வது கிராண்ட் மாஸ்டரானார்.
மேலும், 2023-ல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற திவ்யா தேஷ்முக் செஸ் ஒலிம்பியாட்டிலும் தங்கம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…