
இந்திய அரசியல் சாசனம் கொடுத்த உரிமை, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை, என ‘ஓபிசி ரைட்ஸ்’ அமைப்பின் தலைவர் ரத்தின சபாபதி பேசினார்.
பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு மற்றும் ‘ஓபிசி ரைட்ஸ்’ அமைப்பின் சார்பில், இளையோர் விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. விழாவில், ‘ஓபிசி ரைட்ஸ்’ அமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டபோது நடந்த விவாதத்தில், நாடு ஒருமித்த வளர்ச்சி அடைவதற்கு, பல தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும்.