
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மக்களவையில் நடைபெறவுள்ள விவாதத்தில் மூத்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு சசி தரூர் பரபரப்பாக பதிலளித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பங்கேற்பது குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே சசி தரூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “மவுன விரதம், மவுன விரதம்” என இரு வார்த்தைகளை மட்டும் கூறினார். மேலும், அவர் இதுகுறித்த எந்த கேள்விக்கும் விரிவான பதிலை அளிக்கவில்லை.