
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ படங்களை இயக்கிய மு.மாறன், அடுத்து இயக்கி இருக்கும் திரைப்படம் ‘பிளாக்மெயில்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இதை ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கிறார்.
ஆக.1-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி மு.மாறனிடம் பேசினோம்.
“இது த்ரில்லர், டிராமா ஜானர் கதை. வழக்கமான லைன்தான். ஆனா, திரைக்கதை பரபரப்பா இருக்கும். மருந்து பொருட்களை சப்ளை பண்ற ஹீரோவுக்கும் ஒரு மருந்தகத்துல வேலை பார்க்கிற ஹீரோயின் தேஜு அஸ்வினிக்கும் காதல் வருது. அதுல ஏற்படற ஒரு பிரச்சினையை சரிபண்ண போகிற ஹீரோ சந்திக்கிற விஷயங்கள்தான் கதை. இது கோவையில நடக்கிற படம். மொத்தம் 50 நாள் ஷூட் பண்ணினோம். அதுல 35 நாட்கள் ‘நைட் ஷூட்’. அங்க இருக்கிற ஈஷா யோகா மையம் உள்பட முக்கியமான இடங்கள்ல படப்பிடிப்பை நடத்தியிருக்கோம். கதையில ‘பிளாக்மெயில்’ ஒரு மையப்புள்ளியா இருக்கும்” என்று ஆரம்பிக்கிறார் மு.மாறன்.