
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபயணம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில், பாமக தலைவர் அன்புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில், 3-வது நாளாக நேற்று காஞ்சிபுரம் சட்டமன்ற பகுதியில் நடை பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக, காஞ்சிபுரம் நத்தப்பேட்டை மற்றும் வையாவூர் ஏரிகளை பார்வையிட்டார். இதையடுத்து, காஞ்சிபுரம் பட்டு நெசவுக்கு புகழ் பெற்ற பகுதி என்பதால், காஞ்சிபுரத்தில் பட்டு நெசவுக்கு பிரசித்தி பெற்ற பிள்ளையார்பாளையம் பகுதியில் நெசவாளர்கள் வீட்டுக்கு சென்று, நெசவாளர்களின் குறைகளை அன்புமணி கேட்டறிந்தார்.