• July 28, 2025
  • NewsEditor
  • 0

ராமேசுவரம்: புவி கண்​காணிப்​புக்​காக நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உரு​வாக்​கிய செயற்​கைக்​கோள் ஜூலை 30-ம் தேதி விண்​ணில் செலுத்​தப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் நாராயணன் கூறி​னார். முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல்​கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்​தையொட்டி ராமேசுவரத்​தில் கலாம் நினைவு கருத்​தரங்​கம் நேற்று நடை​பெற்​றது.

இதில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற இஸ்ரோ தலை​வர் நாராயணண் பேசி​ய​தாவது: சந்​திரனுக்கு விண்​கலத்தை அனுப்​பும் அளவுக்கு இஸ்ரோ பிரம்​மாண்​ட​மாக வளர்ச்சி அடைந்​துள்​ளது. 35 கிலோ ராக்​கெட்​டில் தொடங்கி 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்​கெட்டை விண்​வெளிக்கு அனுப்​பும் வல்​லமை​யைப் பெற்​றுள்​ளது. இது சுமார் 40 மாடி உயரம் கொண்ட ராக்​கெட் ஆகும்.

புவி கண்​காணிப்​புக்​காக நாசாவுடன் இணைந்து உரு​வாக்​கிய அதிநவீன சிந்​தடிக் அப்​பர்​சர் ரேடார் செயற்​கைக்​கோளை (NASA-ISRO Synthetic Aperture Radar) ஜிஎஸ்​எல்வி ராக்​கெட் மூல​மாக இஸ்ரோ ஜூலை 30-ம் தேதி விண்​ணில் செலுத்​துகிறது. இது ஜிஎஸ்​எல்வி எஃப்​-16 வரிசை​யில் 18-வது ராக்​கெட்​டாகும். இதற்​கான இறு​திக்​கட்ட பணி​களில் இஸ்ரோ விஞ்​ஞானிகள் ஈடு​பட்​டுள்​ளனர். இந்த செயற்​கைக்​கோள் நிலநடுக்​கம், புயல், பெரு​மழை உள்​ளிட்ட பேரிடர்​கள் குறித்து துல்​லிய​மான தகவல்​களைப் பகிரும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *