
‘சயாரா’ படத்தின் வசூல் ரூ.300 கோடியை கடந்திருக்கிறது. இது, பாலிவுட் வர்த்தக நிபுணர்களை வியப்படைய வைத்திருக்கிறது.
ஜூலை 18-ம் தேதி வெளியான இந்திப் படம் ‘சயாரா’. இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்துவருகிறது. தற்போது இதன் வசூல் ரூ.300 கோடியை கடந்து அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளருக்கு பலமடங்கு லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளது.