• July 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஒப்​புதல் பெறப்​பட்ட தமிழகத்​தின் வளர்ச்​சித் திட்​டங்​கள் அடங்​கிய மனுவை பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்க உள்​ளார்.

கடந்த ஜூலை 21-ம் தேதி முதல்​வர் ஸ்​டா​லினுக்கு நடைப​யிற்​சி​யின் போது தலைசுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவர் சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவரை 3 நாட்​கள் ஓய்​வெடுக்க மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தினர். இதையடுத்​து, தொடர் சிகிச்​சை​யில் மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் இருந்து வரு​கிறார். இருப்​பினும், அரசு மற்​றும் கட்சி தொடர்பான ஆலோ​சனை​களை தொடர்ந்து மருத்​து​வ​மனை​யில் இருந்தே மேற்கொண்டு வரு​கிறார். முதல்வரை, குடும்​பத்​தினர், அமைச்​சர்​கள், தலை​மைச்​செயலர் உள்​ளிட்ட அதி​காரி​கள் தொடர்ந்து சந்​தித்து பேசி வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *