
திருச்சி: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சியில் இன்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார் 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்துக்கு நலத் திட்டங்களையும், நிதிகளையும் வழங்க மறுப்பதாக பிரதமர் மோடியை கண்டித்து இந்தப்ப் போராட்டம் நடைபெற்றது. சிலர் கருப்புக் கொடி ஏந்தியும், சிலர் கருப்புச் சட்டை அணிந்தும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் மாவட்டப் பொருளாளர் முரளி தலைமையில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.